Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்..

ஏப்ரல் 01, 2024 11:46

கொடைக்கானல் ,ஏப்ரல்.01: கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் என்ற சுற்றுலா தளத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் எதிர்பாராத வகையில் நூறடி பள்ளத்தில் விழுந்து விட்டதாகவும் இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 100 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருடன் வந்தவர்கள் எப்படியாவது அவரை மீட்டுக் கொடுங்கள் என்று  கண்ணீருடன் கெஞ்சியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்